78. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் கோயில்
இறைவன் வசிஷ்டேஸ்வரர்
இறைவி சுகந்த குந்தளாம்பிகை
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
தல விருட்சம்  
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருத்தென்குடிதிட்டை, தமிழ்நாடு
வழிகாட்டி தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. சென்றால் திட்டை செல்லும் சாலை பிரியும் இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். சாலையோரக் கோயில். தஞ்சாவூருக்கு வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thittai Gopuramவெண்ணாறு, வெட்டாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையில் திட்டாக இருப்பதால் 'திட்டை' என்னும் பெயர் வழங்கப்படுகிறது. தற்போது நவக்கிரகங்களுள் ஒன்றான 'குருபகவான்' சிறப்புத் தலமாக அறியப்படுகிறது.

Thittai AmmanThittai Moolavarமூலவர் "வசிஷ்டேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். 'பசுபதீஸ்வரர்', 'தேனுபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களும் உண்டு. கருவறை மேல் சந்திரக் காந்தக்கல் உள்ளதால் மேலிருந்து 25 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர்ச்சொட்டு இறைவன் மீது விழுகின்றது. அம்பிகை 'சுகந்த குந்தளாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அவரும் சிறிய வடிவம். 'உலகநாயகி', 'மங்கள நாயகி' என்றும் போற்றப்படுகின்றாள்.

Thittai Guruசுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில் குருபகவான் சன்னதி உள்ளது. குருப்பெயர்ச்சி நடைபெறும் காலங்களில் பக்தர்கள் பெருமளவு வந்து வழிபடுகின்றனர்.

மகாவிஷ்ணு, வசிஷ்டர், கௌதமர், ஆதிசேஷன், தேவர்கள் மற்றும் வேதங்கள் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com